கடந்த 350 ஆண்டுகளைவிட 100 மடங்கு அதிகம் உருகும் பனிப்பாறைகள்; கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம்
உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தைவிட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை.
அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.
அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.
அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.
இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.
அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.
அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.
இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
natural disasters